Tuesday, May 21, 2013

THE SECRETS OF THE MADURAI MAHAL-#1






திருமலை நாயக்கர் மஹால் ரகசியம் #1

 பகலிலும் சில இடங்களில் பக்கம் பார்த்துத்தான் பேசவேண்டும்.

 திருமலை நாயக்கர் மகாலின் அமைப்பில் சில விசேடங்கள்
 இருக்கின்றன.

 இந்த மகாலில் சிற்சில இடங்களில் நின்றுகொண்டு மிகவும் மெல்லிய குரலில் பேசினாலும் பல அடிகளுக்கு அப்பாலுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் இருப்பவர்களுக்குக் கேட்கிறது. ஆனால் சில அடிதூரத்தில் இருப்போருக்குக் கேட்கமாட்டாது. அப்படிப்பட்ட அமைப்பை வேண்டுமென்றேதான் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 ஆனால் இந்த அமைப்பு ஒரு நாயக்க மன்னனின் உயிரைக் காப்பாற்றி
யிருக்கிறது.  சொக்கநாத நாயக்கர் என்பவர் திருமலைநாயக்கரின் 
பேரர். அவர் பதினாறு வயதினிலேயே பட்டத்துக்கு வந்துவிட்டார். 
அப்போது ராயசம், பிரதானி, தளவாய் என்னும் மூன்று உயர்தன 
அதிகாரிகளிடம்தான் மதுரைநாட்டின் உண்மையான அதிகாரம் 
இருந்தது.
 அவர்கள்தாம் சொக்கநாதநாயக்கரையும் மதுரைநாட்டையும் ஆட்டிப் படைத்தார்கள்.
 அதுவும் போதாததற்கு, சொக்கநாதரையே கொன்றுவிட சதி செய்தார்கள்.
 அவர்கள் ரகசியமாகப் பேசிய இடம் அந்த எக்கச்சக்கமான இடங்களில் ஒன்று.
 அவர்கள் பேசியதெல்லாம் சொக்கநாதரின் அந்தரங்க மெய்க்காப்பளரின்
 காதுகளில் விழுந்துவிட்டது.
 சொக்கநாதர் உடனடியாகக் counter-coup ஒன்றைச்செய்து அந்த
 மூன்று பேரையும் ஒழித்துக்கட்டிவிட்டார்.

 அதன்பின்னர் சொக்கநாத நாயக்கர் தம் உதவியாளர்களுடன் 
சுயேச்சையாக ஆள ஆரம்பித்தார்.
ஆனால் ருசி கண்ட பூனையல்லவா. ஒரு பயங்கர யதேச்சாதிகாரியாக
 மாறிவிட்டார்.

 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியகிழக்கு, துருக்கி, பால்க்கன்
 நாடுகளை உள்ளடக்கிய பைசாண்ட்டியம் என்னும் பேரரசு இருந்தது.
 அதன் தலைநகராகிய கான்ஸ்ட்டாண்ட்டிநோப்பலில் ஒரு பெரிய தேவாலயம்  ஒன்றைக்கட்டினார்கள்.
 Hagia Sophia என்னும் அந்தக் கட்டடத்தில் இந்த மாதிரி
 acoustic wonders நிறைய உண்டு. அந்தக் கட்டடமும் திருமலை நாயக்கர்  மகாலுக்கு முன்மாதிரி என்று சொல்வார்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, March 21, 2013

LIES INTO TRUTHS


மெய்போலும்மே மெய்போலும்மே!

"பொய்யை மீண்டும் மீண்டும் அழுத்தமாக அடிக்கடி சொல்லிக்கொண்டே வந்தால் அது உண்மையாகத் தோன்றிவிடும். மக்களும் நம்பிவிடுவார்கள்."
இதைச் சொன்னவர் ஜோச·ப் கோயபல்ஸ் என்பவர். இவர் நாட்ஸி 
ஜெர்மனி என்று சொல்லப்படும் மூன்றாவது ரை·க் பேரரசின் பிரசார 
மந்திரியாக இருந்தவர். அதன் சர்வாதிகாரியாகிய அடா·ப்ல் ஹிட்லரின் 
அத்தியந்த நண்பர்.
                                                                                                                                                           உண்மையிலேயே அவருடைய பெயரை 'யோஸெ·ப் 
கபல்ஸ்' என்றுதான் ஜெர்மானிய முறையில் உச்சரிக்கவேண்டும்.



ஆனால் அவர்தான் முதன்முதலில் சொன்னார் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. 
பல காலமாக மதவாதிகளும் உயர்ஜாதியினரும் கையாண்ட காலங்
காலமாக வந்த உத்திதான் அது.
மக்யாவெல்லி என்ற பெயர் சிலருக்குப் பரிச்சயமாக இருக்கும். 
ஆரவல்லி, சூரவல்லியின் கடைசித் தங்கை என்று கப்சா அடிக்கலாம். 
அதையும் நம்பிவிடுவார்கள்.  இப்போது நிலவும் ·பேஸ்புக், விக்கிப்பீடியாவில் தலைவிரித்தாடும் தமிழிய ஜிங்கோயிஸம் ச்சாவினிஸம் போன்றவற்றில் இந்தப் போக்கைத்தானே நாம் அதிகம் பார்க்கமுடிகிறது.
நிக்கோலோ மக்யாவெல்லி என்பவர் ஒரு பயங்கர ராஜதந்திரி. 


அவர் பதினைந்து - பதினாறாம் நூற்றாண்டுகளில் இத்தாலியில் 
இருந்தவர். அவர் ராஜதந்திரி மட்டுமில்லை. ஒரு பல்துறைப் பேரறிஞர். 
வரலாற்றாசிரியர், தத்துவஞானி, எழுத்தாளர். கவிஞர், பாடலாசிரியர், 
இத்தாலிய கடித இலக்கியத்தின் மூலகர்த்தாக்களில் ஒருவர், அரசியல்வாதி. அரசியல்ஞானி. தற்கால அரசியவாதத் துறையின் சிருஷ்டியாளர். 
அவர் காலத்தில் இத்தாலி பல நாடுகளாக இருந்தது. போர்ஜியா, 
மெடிச்சி போன்ற சில பெரிய குடும்பத்தினரின் கைகளில் ·ப்லாரன்ஸ், 
ஜெனோவா, வெனிஸ் போன்ற சிறுநாடுகள் இருந்தன. சிறுநாடுகள். ஆனால் அங்குதான் ஐரோப்பிய ரெனைஸான்ஸ் எனப்படும் மறுபிறப்பு தோன்றியது. கலை, இலக்கியம், சிந்தனை மறுமலர்ச்சி, விஞ்ஞான ஆராய்ச்சிகள் போன்றவை வளர்ந்தன. லியோனார்டோ டாவின்ச்சி, மைக்கலேஞ்ஜெலோ, ர·பேயல் போன்றவர்கள் வாழ்ந்த இடம், வாழ்ந்த காலம். உலகின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு இந்த நாடுகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. போர்ஜியா குடும்பம் போப் ஆண்டவர் பதவியிலும் இருந்தது. மெடிச்சிகள் அவர்கள் பங்குக்கு கார்டினல் போன்ற பதவிகளில் இருந்தனர். 
மிகப் பெரிய பணக்காரர்கள். செட்டிநாட்டு பாஷையில் சொல்வதானால் லகிட்டுப் பணக்காரர்கள்.
போர்ஜியா குடும்பத்தைச்சேர்ந்த போப் ஆறாம் அலெக்ஸாண்டர் 
ஒழுக்கம் கெட்ட மகா அயோக்கியன். அவனுடைய மகனாகிய கெஸேர் 
போர்ஜியா அரக்ககுணமும் அதிகாரவெறியும் ஒழுங்கீனமும் கொண்டவன்.  
அவனை மாடலாக வைத்து மாக்யாவெல்லி THE PRINCE என்றொரு 
அர்த்த சாஸ்திர நூல் ஒன்றை எழுதினார். 
வெற்றியையும் குறிக்கோளையும் வைத்து செய்யப்படும் எந்தச் 
செய்கையிலும் ஒழுக்கம், தர்ம, நியாயம் போன்றவற்றைப் பார்க்கக் கூடாது என்று சொல்வார். அடையும் வெற்றியும் குறிக்கோளுமே செய்த காரியங்களை நியாயப் படுத்திவிடும் என்பது அடிப்படைக் கோட்பாடு. 
·பேஸ்புக்கிலும் விக்கிப்பீடியாவிலும் ஏராளமான பொய்களை எடுத்துக்கட்டி நிறையப் பரவவிட்டிருக்கிறார்கள். 
அவற்றை ஏராளமானோர் அப்படி அப்படியே நம்பிவிடுகிறார்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Tuesday, March 12, 2013


HASH AND OCTOHORP
#####

நான் எழுதும் தொடர் கட்டுரைகளின் பாகங்களின் நம்பரை 
எழுதும்போது Hash என்று குறிப்பிடப்படும் இந்தக் குறியை - # பயன்படுத்துகிறேன். 
இது டெலி·போனில் டயல் ஸிஸ்டம் மறைந்து பட்டன் 
ஸிஸ்டம் வந்தபோது டெலி·போன் பட்டன்களில் இடம் பெற்று 
பரவியது. 
அதற்கு முன்னர் அதனை 'நம்பர்' என்னும் சொல்லுக்கு உரிய 
குறியாகப் பயன்படுத்தினோம். நம்பர் 6 என்பதை #6 என்று எழுதும் 
வழக்கம் ஏற்பட்டது. 
இந்தக் குறி மிகவும் புராதனமானது. 
பண்டைக்காலத்தில் கெல்த்தியர்(Celts) என்னும் இனத்தவர் 
இருந்தனர். அவர்களிலேயே ட்ரூய்ட்(Druid) என்னும் பிரிவினர் 
இருந்தனர்.
அவர்களுடைய மாந்திரீக சாஸ்திரத்தில் இந்தக் குறியீடு இடம்
பெற்றது. 
அவர்களுடைய மாந்திரீகச்சடங்குகளில் யாககுண்டங்கள் 
மாதிரியும், மண்டலங்கள் மாதிரியும் உள்ள அமைப்புக்கள் பயன்
பட்டன. 
அந்த வகையில் இருந்தக் குறியீட்டின் அமைப்பில் சில 
மண்டலங்கள் போடப்பட்டன. 
அவர்களுடைய வாஸ்து சாஸ்திரத்திலும் இந்த அமைப்பு 
வரும். நடுவில் ஒரு சதுக்கம் இருக்கும். அதனை Village அல்லது 
Town Square என்பார்கள். அதனைச் சுற்றிலும் எட்டு பாகங்களாக 
Plots அல்லது Fields அமையும். தோட்டந்துரவு, விவசாய நிலங்கள், 
குடியிருப்புகள் அந்த ப்லாட்களில் அமைந்திருக்கும். இவற்றின் 
இடையில் வீதி, தெரு, வரப்புகள் போன்றவை செல்லும். 
இதற்கு ஒரு பெயரும் இருந்தது. 

'Octohorp'.

Octo என்பது Eight; Horp என்பது Field.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday, March 11, 2013


Written 12/03/2013

அன்பர்களே,

நேற்று ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>.
என்னத்தைக் கண்டோம்?

வேதம், வேதாந்தம், ஆகமம், தந்திரம், இதிகாசம், புராணம், சாஸ்திரம்,
வித்யா, சடங்கு, சம்பிரதாயம், ஆசாரம், பூஜை, புனஸ்காரம், உபாசனை,
தியானம், அர்ச்சனை, ஜபம், தோத்திரம், துதி, நாமாவளி, உச்சாரணம்,
உச்சாடணம், ஹோ¡மம், யாகம், திருமுறை, தேவாரம், நாலாயிரம், -
இன்னும் இவை போன்ற பல சொற்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளவை.

ஆனால் இவை எவ்வெவற்றைக் குறிக்கின்றன என்ற மிக அடிப்படையான
விபரங்கள்கூட மலேசியத் தமிழ் இந்துக்களில் பெரும்பான்மையினருக்குத்
தெரியாது.

இவை இந்து சமயத்தின் முக்கியமான சொற்கள். அடிக்கடி யாராவது
பேச்சுவாக்கில் சொல்வார்கள்.

நான் சொல்வது உண்மையா இல்லையா என்று பரீட்சை செய்து
பார்க்கவேண்டியதுகூட இல்லை.
விவாதம் பண்ணவேண்டியதும் இல்லை

உங்களுக்கே தெரியும்.
>>>>>>>>>>>>>>>>>>>>

இது நான் எழுதியது.
அதன்பேரில் ஒரே ஓர் ஆள், 'உபாசனை, பூஜை, ஜபம்' பற்றி
கேட்டிருந்தார்.
இதையெல்லாம் பொது அரங்கத்தில் கேட்மாட்டார்கள். அதான் இருக்கே...... ச்சேட் மெஸேஜ். அதன்மூலம். என்ன கேட்கிறார்கள் என்பது
ஏன் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கிறார்கள் என்பது
அவர்களுக்குத்தான் தெரியும். அறியாமையை அம்பலப்படுத்துவானேன் என்ற
எண்ணமாக இருக்கலாம்.
கீழ்க்கண்ட விபரங்கள் நான் 2007-இல் எழுதிய மடலில் ஒரு பகுதி.
அதில் கொஞ்சம் சேர்மானம் சேர்த்து நகாஸ் வேலை செய்து அவருக்கு
மெஸேஜில் அனுப்பினேன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மந்திரஜபம் முதலியவற்றைக் கைக்கொண்டு செய்யப்படும்
உபாசனைகளுக்குக் கிரமம் உண்டு.
இக்காலத்தில் அத்தனை ஆசார அனுஷ்டானங்களுடன் செய்வது
சிரமம்தான்.
மானச ஜபத்தைக் கைக்கொண்டால் வெளிப்படையான ஆசார
அனுஷ்டானங்கள் குறைந்துவிடும்.
எந்த அளவுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்களில் மனதைச்
செலுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய உபாசனையின் மையப்பகுதி - முக்கியமாக கருப்பொருள் - அதன்மீது செலுத்தவெண்டிய கவனமும் ஈடுபாடும் குறைந்துவிடும்.
தற்காலத்து இளைஞர்கள் உபாசனை செய்யவேண்டும் என்று
எண்ணுவதில் தவறில்லை. வேலைகளுக்கும் நடுவில் செய்யவேண்டும் என்றால் அதற்கேற்றவகையில் அதை வைத்துக்கொள்ளலாம்.

 KISS
 Keep It Short and Sweet.

மிக நீளமான மந்திரமோ, உக்கிரமூர்த்திகளின் மந்திரங்களோதான்
மிகவும் ஆற்றல் உள்ளவை என்றும் நினைக்கக்கூடாது.
அதெல்லாம் ஒரு மாடர்ன் ட்ரெண்ட்.
'நாயோட்டும் மந்திரம்' என்று சித்தர்கள் மரபில் ஒரு ரகசிய
மந்திரத்தைக் குறிப்பிடுவார்கள்.

 "நாயோட்டும் மந்திரம் நாதன் இருப்பிடம்
 நாயோட்டும் மந்திரம் நாம் அறியோமே!"

அந்த 'நாயோட்டும் மந்திரம்' ஒரே ஓர் எழுத்துத்தான்.
  தெய்வங்களுக்கு உரிய மூலமந்திரங்கள் ஓர் அட்சரத்திலிருந்து எட்டு அட்சரம் வரைக்கும் இருக்கும்.
நாயோட்டும் மந்திரம் சிவ பரம்பொருளுக்கு உரியது.
விநாயகருக்கு ஓர் அட்சரம். அம்பிகைக்கு ஓர் அட்சரம்,
சுப்பிரமணியருக்கு ஓர் அட்சரம், கிருஷ்ணருக்கு ஓர் அட்சரம்
என்றெல்லாம் இருக்கின்றன.
இவை ஜபத்துக்கும் தியானத்துக்கும் பயன்படக்கூடும்.
இந்த அட்சரங்களுக்கு மேல் பதினைந்து அட்சரம், அஷ்டாட்சரம்
என்றெல்லாம் நிறைய இருக்கின்றன.
'மாறல்' என்னும் முறையின் மூலம் சிவனுக்கு இருபத்தைந்து அட்சரங்கள்
வருமாறு செய்வார்கள்.
'சஹஸ்ராக்ஷரீ வித்யா' என்பது ஆயிரம் அட்சரங்களைக் கொண்டது.
பல அட்சரங்களைக் கொண்ட வலுமிக்க சுப்பிரமண்ய மந்திரம் கூட புழக்கத்தில் இருக்கிறது.
இவையெல்லாம் உபதேசக் கிரமப்படி வாங்கிக்கொள்ளவேண்டியவை.
'நமசிவாய'  மந்திரத்துக்கு உபதேசமே தேவையில்லை என்று சில
சான்றோர் சொல்லியிருக்கிறார்கள்.
தட்சிணாமுர்த்தியே உபதேசித்துவிடுவார்.
குருவைத் தேடுபவர்களுக்கு மஹாதேசிகனான சிவனோ, முருகனோ,
அம்பிகையோ குருவாய் வருவார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லும்.
அல்லது குருவை அனுப்புவார்கள்.
இன்னும் எழுதலாம்....

அன்புடன்

ஜெயபாரதி

Sunday, December 23, 2012

WHY NO WESTERN MEDICINE WEB IN TAMIL?


Lack Of Importance (Tamil Unicode) < Prev  Next >
Posted By: Fri Sep 2, 2011 12:48 am  |

ஓராண்டுக்கு முன்னர் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி:
"நீங்கள் ஏன் மருத்துவத்தைப் பற்றி எழுதக்கூடாது?
கேள்வி-பதில்கூட சொல்லலாமே?"
இது அவ்வப்போது கேட்கப்படும்கேள்விதான்.
ரொம்ப நாட்களுக்கு முன்னரேயே ஒருவர் கேட்டதற்கு நான் கொடுத்த பதில்......

>>>>>>>>>>>>>>>>.
ஓர் அன்பர், "மருத்துவத்தைப்  பற்றி மடலாடல் குழு தமிழில் ஒன்றுகூட இல்லையே, ஏன்?",  என்று கேட்டார்.
"அலோப்ப·தியிலா அல்லது சித்தவைத்தியம், ஆயுர்வேதம் போன்றவற்றிலா?" என்று அவரைக் கேட்டேன்.
"இரண்டிலுமே பார்த்ததில்லை", என்றார்.
ஆமாம்.
இந்தத் துறைகளில் ஏதும் மடற்குழு இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது தமிழில்.
அலோப்ப·தியின் பல பிரிவுகளில் பல மடற்குழுக்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன.
பல வியாதிகளுக்கென்று தனித்தனி மடற்குழுக்கள் இருக்கின்றன. நோயாளிகள், டாக்டர்கள் ஆகியோர் பங்கு பெறும் குழுக்கள் அவை.
Alternative Medicine என்னும் பெயரில்கூட பல குழுக்கள் அலோப்ப·தி தவிர்த்த பிற துறைகளில் இருக்கின்றன.
அவருக்குப் பதில் எதையாவதைச் சொல்லவேண்டுமே.
ஆகவே சொன்னேன்:
"எல்லா அலோபதி டாக்டர்களும் ரொம்ப பிஸியா இருக்கிறாங்களோ
என்னமோ. இப்பவெல்லாம் அவுங்ககிட்ட பேசுறதுக்குக்கூட காசு
கொடுக்கணும் போல்ருக்கு. ரிட்டயர் ஆன டாக்டர் யாராவது, நீங்க சொன்னாப்புல மடற்குழு ஆரம்பிச்சாத்தான் உண்டு. இருக்கிற ஒண்ணு ரெண்டு பேரும்கூட தமிழப்பத்திய்ல எழுதிக்கிட்டு இருக்காங்க்ய.....?"
விளையாட்டுக்கு அவரிடம் அப்படிச் சொன்னேன்.
ஆனால் அது ஒரு நல்ல யோசனை.
பலருக்கு உபயோகப்படும்வகையில் அதைச் செயல்படுத்த நிச்சயம்
முடியும்.
>>>>>>>>>>>>>>>>>>>..

இதை நான் எழுதிய காலகட்டத்தில் வலைத்தளங்கள் இருந்தன. ஆனால் ப்லாகுகள் தோன்றவில்லை. ·பேஸ்புக் கூட மிக அண்மையில் தோன்றியதாயிற்றே.
மாற்று மருத்துவம் என்னும் ஆல்ட்டர்நேட்டிவ் மெட்ஸின் பற்றி தமிழ்
விக்கிப்பீடியாவில் இருக்கிறதா என்று பாருங்கள்?
தமிழில் எவ்வளவோ இல்லை.
ஆனால் தமிழில் மட்டும் 30000 ப்லாகுகள் இருப்பதாக இணையத்துப் பழம்புலி ஒருவர் சொன்னார்.
அதில் என்னுடைய ப்ன்னிரண்டு புலாகுகளையும் சேர்த்தாரா
இல்லையா என்பது தெரியவில்லை.
·பேஸ்புக்கில்மட்டும் ஐந்து லட்சம் தமிழர்கள் இருப்பதாக மலேசியாக் காரர் ஒருவர் சொன்னார். மலேசியத் தமிழர்கள் மட்டுமே  ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொன்னார். சுங்கைப் பட்டாணி தமிழர்களே
எனக்குத் தெரிந்து எண்ணூற்றுச்சொச்சம் பேர் இருக்கிறார்கள்.
எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், "இவ்வளவு இருந்தும் மருத்துவம் என்னும் இன்றியமையாத முக்கியமான துறை¨யைப் பற்றி தமிழில் மிக மிக மிகக் குறைவாகவே இருக்கிறதே!" என்பதுதான்.

நம்ம ஆட்களின் பார்வை கீர்வை, நோட்டம், நாட்டமெல்லாமே எங்கோ சிதறிப் பாய்கின்றன.
மதுரை மருத்துவக் கல்லூரிக்காக ஒரு குறிப்பிட்ட ·பேஸ்புக்.
அதில்போய் தமிழ் வருடப் பிறப்பை மாற்றியது குறித்து காரசாரமாக ஒருவர் எழுதினார்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அதற்கு நான் எழுதினேன் -
DrJaya Barathi:
"Better to confine the dealings to our college, college life, professors, outstanding medicos, post-studies experiences/adventures, and good old Madurai.
Better refrain from topics like new year. There are other FaceBook venues, blogs, discussion groups, etc, for such topics".
August 29 at 12:25pm

Madurai Medicos and 5 others like this.

Ranjith Veeramani:
"Aaanalum neenga romba strict a irukeenga sir . .!"
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஆமாம்.... பாருங்கள்....... கல்லூரி, கல்லூரி வாழ்க்கை, மருத்துவப் படிப்பு, படித்தபின் ஏற்படும் அனுபவங்கள், வேலை வாய்ப்புக்கள், மதுரை, மறக்கப்பட முடியாத மாணவர்கள்/ஆசிரியர்கள்......

இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.
ஒரு சில டாக்டர்கள் ஒரு கூட்டமைப்பாக வைத்துக்கொண்டு மருத்துவ விளக்கங்கள் ஆலோசனைகள் ஆகியவற்றையும்கூட கொடுக்கலாம்.
நோயாளிகள் ஏமாறாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கலாம், அல்லவா.
இதற்கென்று விஜயகாந்த் விஜிலன்ஸ் வரவேண்டுமா, என்ன


 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Friday, November 16, 2012

KARMAS -#1

KARMAS

        There is something known as 'Prabathi' margam or path. Simply put, it is the path of total surrender to God.
There are three types of karma which accrue during life. Praartham, Sanjitham, and Aakaamyam. What is the nature of these karmas? Why are they three? A karma is a karma - by whatever name you may call it. But why have three? Instead of one? May be one of  these days, I will try to explain this in very very simple terms. 
        A person has to live out the outcome of his past karmas. But in the proses, he obtains more karmas. This accumulated karma might be lived out during the same life. Or it may determine the next birth and be carried forward into the next birth.
So, it goes about that the next karma is determined and whatever happens therein is already ordained.
And the Supreme God is the Lord and Master of everything that happens. 
What you get in life is what has been given. 
        There is nothing you should do.
The duty of a thinking living being, is to surrender totally to God. Let Him/Her decide on what He/She wishes to give/do.
Dont try to know the future. 
With that knowledge, your actions might get modified voluntarily or involuntarily. 
What will you do?
Whatever you do would defy the Overlordship of the Lord Himself.
So, Prabathi marga in its absolute form prohibits consulting the predictive sciences like astrology, palmistry, etc. 
Dont dabble with what is in store.
Whatever will be, will be.
Que Sera Sera. 

        There is lot more to write......

Regards

JayBee

Friday, November 9, 2012

MAYAN ERA AND KALI YUGA #101112


[agathiyar] MAYAN ERA AND KALI YUGA(Tamil unicode)
Inbox
x

jay bee
9:24 AM (8 minutes ago)
to agathiyar
 


அன்பர்களே,

அடிக்கடி யாராவது 21-12-2012-இல் என்ன நடக்கும் என்று கேட்டுக்
கொண்டேயிருக்கிறார்கள்.
மாயான்களின் காலண்டர்படி அவர்களின் பஞ்சாங்கம் முடிகிறது.
'முடிந்த பிறகு என்ன?' என்பதை அவர்களின் பஞ்சாங்கம் ஒன்றும் சொல்லவில்லை.
இதோ பாருங்கள்......
3102 BC -யில் துவாபர யுகம் முடிந்தது. கலியுகம் ஆரம்பமாகியது. இது நம்ம பஞ்சாங்கம். வருசமாசந்தேதி நாழிகை முதற்கொண்டு நல்ல ஆட்களும் கணிக்கத்தான் செய்திருக்கிறார்கள்.
நம்ம யுகாப்த பஞ்சாங்கத்தின்படி கலியுகத்தில் இன்னும் நாலு லட்சத்துச் சொச்சம் வருஷம் பாக்கியிருக்கிறது.
துவாபர யுக முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்து கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் கலியுகம் தோன்றியது.
கலி தோன்றியதும் பாண்டவர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
இன்னும் Fine-Tuning செய்து பார்த்தால் துவாபர யுகம் முடிந்த
நேரத்தைக்கூட துல்லியமாகச் சொல்வார்கள்.
தர்மபுத்திரராகிய யுதிஷ்டிரர் - பாண்டவர்களில் மூத்தவர் - பொய்
சொன்ன நேரத்தில் துவாபரம் முடிந்து கலியுகம் பிறந்ததாகச் சொல்வார்கள்.
அதான்.... அந்த "அஸ்வத்தாம ஹத: <குஞ்சர:> episode.
அதுவரை தரையைத் தொடாமல் ஒரு ஜாண் உயரத்தில் ஓடிக்கொண்டிருந்த தர்மபுத்திரரின் தேர் உடனேயே தரை தட்டி, தரையின்மேல் ஓட ஆரம்பித்தது என்பார்கள்.
அதன்பின்னர் கலியுகத்தின் ஆரம்பத்துடன் பாண்டவர்கள் ஆட்சி
தொடங்கிவிட்டது.
பின்னர் துவாரகை அழிந்துபோய், கிருஷ்ணபரமாத்மாவின் அவதாரமும் முடிந்துவிட்டது.
இந்த மாதிரி ஏதாவது நடக்கலாம்.
அதான் கலிபுருஷன் ஆட்சிக்கு மீண்டும் வந்துவிட்டானே....
பாராக் ஓபாமா!
ஈரான், வடகொரியா, பாக்கீஸ்தான், ஸீரியா, யேமன்..... எத்தனையோ  நாடுகள் பாக்கியிருக்கின்றனவே.

அன்புடன்

ஜெயபாரதி