Friday, July 19, 2013

MALAYSIAN MAGIC BOOK-#1

ABOUT THE BOOK -
MALAYSIAN MAGIC







There is a book called Malaysian Magic
The Book is a collection of several research papers.
They came out in certain journals on various occassions.
In 1986 or 1987, there was a course and work-shop for Hospital Managers and their managerial staff. This was held in a place called Taiping.
I was the Medical Superintendant of Kangar General Hospital in Perlis State.
I took my middle-management staff along.

There was a museum in Taiping.
I saw a fantastic collection of journals containing hundreds of research papers.
I collected a few and asked permission from the Museum curator to photocopy them.
Since I had helped him with some valuable information about some exhibits in the Museum, he lent me the journals.
I photocopied them and brought them to Kangar where I had them bound.
You know, in those days - before 1988, photocopy was an expensive affair.
I page cost 20 cents at that time.

The bound book contains the following important topics among several others.
This is a very useful and highly informative book.
Interesting to know.
Just go through the list of contents.

1.The Evil Eye
2.To Catch A Thief
3. Spirit Exorcism
4. Miscellaneous Malay Charms
5. Hate Magic
6. Love Magic
7. Sex Magic
8. Protective Magic
9. Business Magic
10. Legal Magic
11. Wealth Magic
12. Caballistic Alphabet
13. Magic Squares
14. Notes On Invulnerability and War Magic
15. Silat Gayong
16. Ilmu Ghaib (Invulnerability)
17. Criminal Magic
18. Buduh
19. Malay Magic Compass
20. Keramat

99 Glorious Attributes Of God

Aspects of Spirit - Mediumship, Trance, and Ecstacy in Peninsular Malaysia
1. Kuda Dancers
2. Taboo Language
3. The Seance
4. Fire-Walking

Black Magic
1. The Wax Doll
2. The Double Wax Doll

Measures To Counteract Santau
1. The Flying Egg
2. Invulnerability
3. Kebal Minyak
4. Kebal Pukau
5. Kebal Kulit Nangka
6. Kebal Daging
7. Kebal Penimbul
8. Kebal Sampul

When I can, I will write about some of the items.
I have already explained about Kebal Pukau and the Malay Sthambhana Vidhya.

                     $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, July 11, 2013

NAAN- #1




நான் - #1

        காஞ்சியில் எங்களாழ்வான் என்றொரு வைணவப்பேரறிஞர் இருந்தார். 
வரதகுரு என்பவர் காஞ்சியில் இருந்த இளைஞர். அவருடைய தந்தை 
அவரை எங்களாழ்வானிடம் ஸ்ரீபாஷ்யம் என்னும் வைஷ்ண நூலின் விரிவுரையைப் பாடம் கேட்டு கற்றறிவதற்காக அனுப்பினார். 
எங்களாழ்வான் வீட்டு வாசல் கதவை வரதகுரு திறந்திருக்கிறார். அரவம் கேட்டு எங்களாழ்வான் "யார்ராது?" என்று கேட்டிருக்கிறார். 
ஏற்கனவே நன்கு பரிச்சயமான ஆளல்லவா. ஆகவே "நான் தான் 
வந்திருக்கிறேன்" என்றார். குரலை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார் என்ற எண்ணம். 
"ஓஹோ. அப்படியா? நான் செத்தபிறகு வந்துபார்", என்று சொல்லிவிட்டார். 
அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய வரதகுரு தம் தந்தையாரிடம் விஷயத்தைச் சொன்னார்.
அவர் சிரித்துக்கொண்டே, "நான் என்னும் தன்மையில்லாமல் வந்து 
பார்க்கச்சொல்கிறார். அது உண்மையிலேயே குருவிடம் ஸ்ரீபாஷ்யம் போன்ற ஒன்றைக் கேட்டுப் புரிந்து உணர்வதற்குத் தடையாக இருக்கும்"., என்றார்.
வரதர் மீண்டும் சென்றார்.
ஆழ்வான் மீண்டும் "யார்ராவன்?"
இம்முறை வரதர் மிகவும் பவ்வியமாக, "அடியேன் தாஸானுதாஸன் 
ஸ்ரீமத் ராமானுஜதாஸன்", என்று சொல்லி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.
அதன்பின்......

பாடம் ஒழுங்காக நடந்தது. வரதகுரு தெளிவாகக் கற்றுக்கொண்டார். 



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Wednesday, June 12, 2013

HERO OR VILLAIN-#1


 ஹீரோவா, வில்லனா? -#1



இது உண்மையான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தொகுத்து எழுதப் பட்டது. 
எழுதி ஏழாண்டுகள் ஆகின்றன. 
இன்னும் கொஞ்சம் விபரங்களைச் சேர்த்து பிழைகளை நீக்கி, செப்பம் செய்து எழுதியிருக்கிறேன்.

ஊமையனின் அண்ணன் வீரபாண்டிய கட்டபொம்மு பாஞ்சாலங் குரிச்சி அதிபராக இருந்தவர். ரொம்பவும் Controversial-ஆன ஆசாமி. 
அவருக்கு ஒரு மந்திரி இருந்தார். அந்தக் காலத்தில் மந்திரி, நிதிஅமைச்சர், படைத்தலைவர் போன்ற பல துறைகளில் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சமாக கொசிறு, துக்கடா சேர்ந்து ஆன கூட்டுக்கறிப் பதவிகள் இருந்தன. தளவாய், தானாபதி, பேஷ்வா போன்றவை. 
கட்டபொம்முவுக்கு சுப்பிரமணிய பிள்ளை என்பவர் தானாபதியாக 
இருந்தார். அவரை தானாபதியா பிள்ளை என்றே அழைத்தார்கள்.
கட்டபொம்மு நல்லவரா கெட்டவரா என்ற விவாதமெல்லாம் ரொம்ப 
விவகாரமான விஷயங்கள். 
அது போலவேதான் தானாபதியா பிள்ளையும்.
வீரபாண்டிய கட்டபொம்மு சினிமாப் படத்தில் இந்தப் பாத்திரத்தை உத்தமர்களில் உத்தமராகச் சித்தரித்திருப்பார்கள்.
ஆனால் இவர்தான் ரொம்பவும் Controversial-ஆன ஆசாமி. 

உண்மையிலேயே வெள்ளைக்காரர்களுக்கு விரோதி என்றால் இந்த 
ஆசாமிதான். 
கட்டபொம்மு தாம் ஆட்சியிலிருந்த ஒன்பது ஆண்டுகளில் பெரும்பகுதி வெள்ளைக்காரர்களுடன் நேசமாக இருந்த ஆள். 
ஒழுங்காக வரிகளைக் கட்டிக்கொண்டு ஆரம்பத்தில் இருந்தார்.
தானாபதியா பிள்ளை பாஞ்சாலங்குரிச்சியில் ஒரு சர்வாதிகாரியாக 
விளங்கியவர்.
இவர் தமிழகமெங்கும், அதற்கு அப்பால் மைசூர், கேரளா ஆகிய இடங்களிலும் விளங்கிய ஒரு மாபெரும் ரகசிய உளவாளி நெட்வர்க், 
திட்டமிடல் போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகித்தவர். 
இந்த நெட்வர்க் பிரிட்டிஷ் ஈஸ்ட் இண்டியாக் கம்ப்பெனிக்கு 
எதிரானது. கும்பினி என்றும் கும்பினியார் என்றும் அக்காலத் தமிழர்கள் 
இந்தக் கம்பெனியைக் குறிப்பிட்டனர்.
வரி வசூல், வர்த்தகம் போன்றவை தவிர படைபலத்தாலும் ஆயுத 
பலத்தாலும் சூழ்ச்சியாலும் நாட்டைப் பிடித்துக்கொள்ளும் எண்ணமும் 
கும்பினிக்கு இருந்தது என்பதை அந்தக் காலத்தில் இந்த புரட்சி 
நெட்வர்க்கினர் அறிந்திருந்தனர். பல பாளையங்கள், மைசூர், கேரளா 
முதலிய இடங்களில் நெட்வர்க் இருந்தது.
கட்டபொம்முவுக்கு ஆலோசனைகள் சொல்வதுடன் தம் வாக்கு 
சாதுர்யத்தால் மற்ற பாளையக்காரர்களையும் கலகம் செய்யத் தூண்டி
விட்டுக்கொண்டேயிருந்தார்.
கட்டபொம்முவுக்கு வெள்ளைக்காரர்களுடன் ஏற்பட்ட அத்தனை 
பிணக்குகளுக்கும் தானாபதியா பிள்ளைதான் காரணர்.
கட்டபொம்முவை விசாரிக்க அழைத்த ஜேக்ஸன் துரையின் 
அதிகாரத்தை ஒழித்தவர் தானாபதியா பிள்ளை. 
ஆனானப்பட்ட ஜேக்ஸனையே ஒடுக்கியவர் என்ற மமதையும் அவருக்கு இருந்தது. 
அவர் செய்து வந்த இடக்கான காரியங்களையெல்லாம் அப்போது 
தென்மாவட்டக் கலெக்டராக இருந்த லூஷிங்க்டன் சென்னைக்கு அறிவித்துக் கொண்டேயிருந்தார். 
வெள்ளைக்காரர்களின் முக்கிய முதல் எதிரியாகத் தானாபதியா 
பிள்ளையை அவர்கள் கருதினார்கள்.
நிலவரங்களைக் கண்டித்தும் காரணம் கேட்டும் லூஷிங்க்டன் 
கட்டபொம்முவுக்குக் கடிதங்கள் அனுப்பியிருந்தார். 
அந்தக் கடிதங்களையெல்லாம் தானாபதியா பிள்ளை படித்துவிட்டுக் 
கிழித்துவிடுவார். 
கட்டபொம்முவிடம் சொல்வதுமில்லை. 

அப்படியிருக்கும்போது தானாபதியா பிள்ளையின் மகனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 
கட்டபொம்முவைவிட அந்த வட்டாரத்தில் தானாபதியா பிள்ளைக்கே 
செல்வாக்கு அதிகம். 
ஆகவே பெருங்கூட்டம் வருமென்று எதிர்பார்க்கப்பட்டது. 
திருமணத்துக்குக் கட்டபொம்மு நெல்லும் வெள்ளி ரூபாய்களும் 
கொடுத்தார். பணம் போதுமானதாக இருந்தது. 
ஆனால் நெல் போதவில்லை.
அந்தக் காலகட்டத்தில் பாளையங்களிலிருந்தும் மக்களிடமிருந்தும் பணமாக வரி வசூலித்ததுபோக நெல்லாகவும் வசூலித்தார்கள்.
இதையே பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாகிய கும்பினியும் செய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு இடங்களில் பிரம்மாண்டமான 
நெற்களஞ்சியங்களைக் கும்பினி வைத்திருந்தது. 
அதைத் தானாபதியா பிள்ளை கொள்ளையடிக்கத் திட்டமிட்டார். 
ஐம்பது பேர் கொண்ட அதிரடித் தாக்குதல் வீரர்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார். 
அந்தக் காலத்தில் நம்ம ஆட்களும் Special Forces, Commando போன்ற விசேஷப் பிரிவுகளை வைத்திருந்தார்கள்.
வீட்டுக்கு ஒரு ஆள் என்ற வகையில் ஈட்டியையும் அகப்பட்ட கத்தி, 
கம்பு, கபடாக்களைத் தூக்கிக்கொண்டு சினிமாவில் 'பொதுப் பொது'வென்று ஓடிவருவது போன்றவையெல்லாம் கிடையாது. எல்லாருமே Standing Army வைத்திருந்தார்கள்.  
இதைப் பற்றி ரொம்பவும் விரிவாக எழுதலாம். 
அப்புறம் அந்த தானாபதியா பிள்ளை காணாமல் போய்விடுவார்.
பிள்ளைவாள் அந்த ஸ்பெஷல் ஸ்குவாடைப் பார்த்துச் சொன்னார்:
"இந்த நெல்லெல்லாம் நம்முடையது. வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. எங்கிருந்தோ வந்த வெள்ளை மூஞ்சிக் குரங்குகளுக்கு ஏன் கொடுக்க வேண்டும்?" 
இந்த வசனத்தை தானாபதியா பிள்ளைதான் நெல்லைக் கொள்ளை 
அடிப்பதற்கு முன்னர் சொன்னார் என்பார்கள்.
ஆனால் அவருக்கும் முன்னால் மேலூர்க் கள்ளர்கள் இதே வாசகத்தைச் சொல்லி வரி கட்டாமல் இருந்து போராடியிருக்கின்றனர்.
திட்டமிட்டபடியே கொள்ளயடித்துவிட்டார்கள். 
களஞ்சியத்தின் காவலாளியை அடித்துக் குற்றுயிராகக் களஞ்சியத்தில் தூக்கிப்போட்டு, அவன் உடல்மேல் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். 

இந்த நான்கு நெற்களஞ்சியங்களுக்கெல்லாம் பொறுப்பாளராக 
பிர்க்கெட் என்னும் துரை இருந்தார். அவர் நெல்லின் விலைப் பருவத்துக்
கேற்ப நெல்லை விற்றுப் பணமாக்கிக் கும்பினியிடம் சேர்ப்பித்து விடுவார். 
விஷயம் அறிந்த பிர்க்கெட் கட்டபொம்முவை நேரில் வந்து பார்த்து 
விசாரித்தார். தானாபதியைத் தம்மிடம் ஒப்படைக்கச் சொன்னார். 
கட்டபொம்மு கும்பினிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டி அதற்கும் 
மேலாகக் கூடுதல் தொகை கொடுக்க முன்வந்தார். 
அப்போது தானாபதியா பிள்ளை வேகமாக வந்து தெலுங்கில் 
கட்டபொம்முவிடம் "பணிந்துபோகவே கூடாது", என்று சொல்லி, 
சென்னையில் இருக்கும் கும்பினி தலைமையகத்துக்குச் சென்று 
முறையிடலாம் என்று சொல்லி, "வெள்ளைமூஞ்சிக் குரங்குகளுக்குப் பயப்படக்கூடாது" என்றும் சொன்னார். 
'தானாபதி ஏதோ நெகட்டிவாகச் சொல்கிறான்', என்று பிர்க்கெட் 
அறிந்துகொண்டதோடு 'வெள்ளைமூஞ்சிக் குரங்கு' என்று தம்மைத் 
திட்டுவதையும் புரிந்துகொண்டார். 
ஒரு மொழியை அறிந்துகொள்ளும்போது இந்த மாதிரி திட்டு, வசவு, கெட்டவார்த்தை போன்றவற்றைத்தான் முதலில் அறிந்துகொள்வார்கள். 
அதாவது Normal-ஆன ஆசாமிகள். 
இதையெல்லாம் பிர்க்கெட் சென்னைக்கு ரிப்போர்ட் செய்துவிட்டார். 
கட்டபொம்முவாலும் தானாபதியாலும் பயமுறுத்தப்பட்ட 
பாளையக்காரர்கள் பிராது கொடுத்தனர். 
மேஜர் பானர்மேன் தலைமையில் பெரும்படை திரட்டப்பட்டு 
பாஞ்சாலக்குரிச்சிக்கு வந்து சேர்ந்தது. 
போர் ஆரம்பித்துவிட்டது. 
திடீரென்று கோட்டையை விட்டுவிட்டு தப்பிச்சென்று திருச்சியில் இருக்கும் கும்பினித் தலைமைத்துவத்தைச் சந்தித்துப் பேசி Negotiate 
செய்துகொள்ளலாம் என்ற திட்டத்தோடு 09 -09 - 1799 அன்று 
பாஞ்சாலங்குரிச்சி கோட்டையைக் கைவிட்டு விட்டு கட்டபொம்முவும் 
வேறு சிலரும் தப்பிச்சென்றனர். இதுவும் தானாபதியா பிள்ளையின் 
யோசனைதான்.
கால்நடையாக நாகலாபுரத்துக்குச் சென்று அங்கிருந்து கோலார்பட்டி 
ஜமீனுக்குச் சென்றனர்.
கட்டபொம்முவின் கடும் எதிரியாகிய எட்டயாபுரத்து எட்டப்ப 
நாயக்கரிடம் கட்டபொம்முவைத் தேடிப்பிடிக்கும் கடமை ஒப்படைக்கப் பட்டது. 
வெள்ளையர்கள் உட்பட ஆயிரம் வீரர்கள் கொண்ட படை கோலார்பட்டி அரண்மனையைச் சுற்றி வளைத்துக்கொண்டது. 
கட்டபொம்மு மாடியிலிருந்து அதைப் பார்த்துவிட்டு, தாமும் இன்னும் சிலரும் வெகு நெருக்கமாகக் குதிரைகளில் பாய்ந்து கத்தியால் வெட்டிக் கொண்டே வியூகத்தைப் பிளந்துவிட்டு முன்செல்வது என்றும் தானாபதியா பிள்ளை பின்தொடர்ந்து வருவது என்றும் திட்டமிட்டார். 
ஆயிரம் பேர் கொண்ட படையைத் தம்முடைய சிறிய படையால் பிளந்து கொண்டு கட்டபொம்மு தப்பிச்சென்றார்.
அவர்களுடன் தொடர்ந்து வந்திருக்கவேண்டிய தானாபதியா பிள்ளை 
மாட்டிக்கொண்டார். 
கட்டபொம்முவைவிட அபாயமான ஆள் தானாபதிதான் என்று பானர்மேன் அறிவித்துவிட்டு உடனடியாகத் தூக்கில்போட உத்தரவிட்டான்.
பாஞ்சாலங்குரிச்சியைவிட்டு கட்டபொம்மு வெளியேறிய ஐந்தாம் நாள் நாகலாபுரத்தில் ஒப்புக்கு ஒரு விசாரணையை நடத்திவிட்டு அருகிலிருந்த வேப்பமரத்தில் தானாபதியா பிள்ளையைத் தூக்கில் போடச்செய்தான்.
அவர் இறந்தவுடன் அவர் தலையை உடலிலிருந்து வெட்டி எடுத்தார்கள். அதைப் பாஞ்சாலங்குரிச்சிக்கு எடுத்து வந்தார்கள்.
பழங்காலத்தில் தமிழர்களிடையே இருந்த கொடிய தண்டனைகளில் 
கழுவில் ஏற்றலும் இருந்தது. 
ஒரு கழுமரத்தை எடுத்து அதில் தானாபதியா பிள்ளையின் தலையைச் செருகி அந்தக் கழுமரத்தை பாஞ்சாலங்குரிச்சி அரண்மனையின் முன் நட்டுவைத்தார்கள். 
மக்கள் அனைவரையும் வந்து பார்க்கச் செய்தார்கள். 
தானாபதியின் தலையற்ற உடலை நாகலாபுரத்தில் நாய்களுக்கும் 
நரிகளுக்கும் இரையாகுமாறு போட்டுவைத்தார்கள். 
மேஜர் பானர்மேனின் சீற்றம் அந்த அளவுக்கு இருந்தது. 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Tuesday, May 21, 2013

THE SECRETS OF THE MADURAI MAHAL-#1






திருமலை நாயக்கர் மஹால் ரகசியம் #1

 பகலிலும் சில இடங்களில் பக்கம் பார்த்துத்தான் பேசவேண்டும்.

 திருமலை நாயக்கர் மகாலின் அமைப்பில் சில விசேடங்கள்
 இருக்கின்றன.

 இந்த மகாலில் சிற்சில இடங்களில் நின்றுகொண்டு மிகவும் மெல்லிய குரலில் பேசினாலும் பல அடிகளுக்கு அப்பாலுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் இருப்பவர்களுக்குக் கேட்கிறது. ஆனால் சில அடிதூரத்தில் இருப்போருக்குக் கேட்கமாட்டாது. அப்படிப்பட்ட அமைப்பை வேண்டுமென்றேதான் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 ஆனால் இந்த அமைப்பு ஒரு நாயக்க மன்னனின் உயிரைக் காப்பாற்றி
யிருக்கிறது.  சொக்கநாத நாயக்கர் என்பவர் திருமலைநாயக்கரின் 
பேரர். அவர் பதினாறு வயதினிலேயே பட்டத்துக்கு வந்துவிட்டார். 
அப்போது ராயசம், பிரதானி, தளவாய் என்னும் மூன்று உயர்தன 
அதிகாரிகளிடம்தான் மதுரைநாட்டின் உண்மையான அதிகாரம் 
இருந்தது.
 அவர்கள்தாம் சொக்கநாதநாயக்கரையும் மதுரைநாட்டையும் ஆட்டிப் படைத்தார்கள்.
 அதுவும் போதாததற்கு, சொக்கநாதரையே கொன்றுவிட சதி செய்தார்கள்.
 அவர்கள் ரகசியமாகப் பேசிய இடம் அந்த எக்கச்சக்கமான இடங்களில் ஒன்று.
 அவர்கள் பேசியதெல்லாம் சொக்கநாதரின் அந்தரங்க மெய்க்காப்பளரின்
 காதுகளில் விழுந்துவிட்டது.
 சொக்கநாதர் உடனடியாகக் counter-coup ஒன்றைச்செய்து அந்த
 மூன்று பேரையும் ஒழித்துக்கட்டிவிட்டார்.

 அதன்பின்னர் சொக்கநாத நாயக்கர் தம் உதவியாளர்களுடன் 
சுயேச்சையாக ஆள ஆரம்பித்தார்.
ஆனால் ருசி கண்ட பூனையல்லவா. ஒரு பயங்கர யதேச்சாதிகாரியாக
 மாறிவிட்டார்.

 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியகிழக்கு, துருக்கி, பால்க்கன்
 நாடுகளை உள்ளடக்கிய பைசாண்ட்டியம் என்னும் பேரரசு இருந்தது.
 அதன் தலைநகராகிய கான்ஸ்ட்டாண்ட்டிநோப்பலில் ஒரு பெரிய தேவாலயம்  ஒன்றைக்கட்டினார்கள்.
 Hagia Sophia என்னும் அந்தக் கட்டடத்தில் இந்த மாதிரி
 acoustic wonders நிறைய உண்டு. அந்தக் கட்டடமும் திருமலை நாயக்கர்  மகாலுக்கு முன்மாதிரி என்று சொல்வார்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, March 21, 2013

LIES INTO TRUTHS


மெய்போலும்மே மெய்போலும்மே!

"பொய்யை மீண்டும் மீண்டும் அழுத்தமாக அடிக்கடி சொல்லிக்கொண்டே வந்தால் அது உண்மையாகத் தோன்றிவிடும். மக்களும் நம்பிவிடுவார்கள்."
இதைச் சொன்னவர் ஜோச·ப் கோயபல்ஸ் என்பவர். இவர் நாட்ஸி 
ஜெர்மனி என்று சொல்லப்படும் மூன்றாவது ரை·க் பேரரசின் பிரசார 
மந்திரியாக இருந்தவர். அதன் சர்வாதிகாரியாகிய அடா·ப்ல் ஹிட்லரின் 
அத்தியந்த நண்பர்.
                                                                                                                                                           உண்மையிலேயே அவருடைய பெயரை 'யோஸெ·ப் 
கபல்ஸ்' என்றுதான் ஜெர்மானிய முறையில் உச்சரிக்கவேண்டும்.



ஆனால் அவர்தான் முதன்முதலில் சொன்னார் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. 
பல காலமாக மதவாதிகளும் உயர்ஜாதியினரும் கையாண்ட காலங்
காலமாக வந்த உத்திதான் அது.
மக்யாவெல்லி என்ற பெயர் சிலருக்குப் பரிச்சயமாக இருக்கும். 
ஆரவல்லி, சூரவல்லியின் கடைசித் தங்கை என்று கப்சா அடிக்கலாம். 
அதையும் நம்பிவிடுவார்கள்.  இப்போது நிலவும் ·பேஸ்புக், விக்கிப்பீடியாவில் தலைவிரித்தாடும் தமிழிய ஜிங்கோயிஸம் ச்சாவினிஸம் போன்றவற்றில் இந்தப் போக்கைத்தானே நாம் அதிகம் பார்க்கமுடிகிறது.
நிக்கோலோ மக்யாவெல்லி என்பவர் ஒரு பயங்கர ராஜதந்திரி. 


அவர் பதினைந்து - பதினாறாம் நூற்றாண்டுகளில் இத்தாலியில் 
இருந்தவர். அவர் ராஜதந்திரி மட்டுமில்லை. ஒரு பல்துறைப் பேரறிஞர். 
வரலாற்றாசிரியர், தத்துவஞானி, எழுத்தாளர். கவிஞர், பாடலாசிரியர், 
இத்தாலிய கடித இலக்கியத்தின் மூலகர்த்தாக்களில் ஒருவர், அரசியல்வாதி. அரசியல்ஞானி. தற்கால அரசியவாதத் துறையின் சிருஷ்டியாளர். 
அவர் காலத்தில் இத்தாலி பல நாடுகளாக இருந்தது. போர்ஜியா, 
மெடிச்சி போன்ற சில பெரிய குடும்பத்தினரின் கைகளில் ·ப்லாரன்ஸ், 
ஜெனோவா, வெனிஸ் போன்ற சிறுநாடுகள் இருந்தன. சிறுநாடுகள். ஆனால் அங்குதான் ஐரோப்பிய ரெனைஸான்ஸ் எனப்படும் மறுபிறப்பு தோன்றியது. கலை, இலக்கியம், சிந்தனை மறுமலர்ச்சி, விஞ்ஞான ஆராய்ச்சிகள் போன்றவை வளர்ந்தன. லியோனார்டோ டாவின்ச்சி, மைக்கலேஞ்ஜெலோ, ர·பேயல் போன்றவர்கள் வாழ்ந்த இடம், வாழ்ந்த காலம். உலகின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு இந்த நாடுகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. போர்ஜியா குடும்பம் போப் ஆண்டவர் பதவியிலும் இருந்தது. மெடிச்சிகள் அவர்கள் பங்குக்கு கார்டினல் போன்ற பதவிகளில் இருந்தனர். 
மிகப் பெரிய பணக்காரர்கள். செட்டிநாட்டு பாஷையில் சொல்வதானால் லகிட்டுப் பணக்காரர்கள்.
போர்ஜியா குடும்பத்தைச்சேர்ந்த போப் ஆறாம் அலெக்ஸாண்டர் 
ஒழுக்கம் கெட்ட மகா அயோக்கியன். அவனுடைய மகனாகிய கெஸேர் 
போர்ஜியா அரக்ககுணமும் அதிகாரவெறியும் ஒழுங்கீனமும் கொண்டவன்.  
அவனை மாடலாக வைத்து மாக்யாவெல்லி THE PRINCE என்றொரு 
அர்த்த சாஸ்திர நூல் ஒன்றை எழுதினார். 
வெற்றியையும் குறிக்கோளையும் வைத்து செய்யப்படும் எந்தச் 
செய்கையிலும் ஒழுக்கம், தர்ம, நியாயம் போன்றவற்றைப் பார்க்கக் கூடாது என்று சொல்வார். அடையும் வெற்றியும் குறிக்கோளுமே செய்த காரியங்களை நியாயப் படுத்திவிடும் என்பது அடிப்படைக் கோட்பாடு. 
·பேஸ்புக்கிலும் விக்கிப்பீடியாவிலும் ஏராளமான பொய்களை எடுத்துக்கட்டி நிறையப் பரவவிட்டிருக்கிறார்கள். 
அவற்றை ஏராளமானோர் அப்படி அப்படியே நம்பிவிடுகிறார்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Tuesday, March 12, 2013


HASH AND OCTOHORP
#####

நான் எழுதும் தொடர் கட்டுரைகளின் பாகங்களின் நம்பரை 
எழுதும்போது Hash என்று குறிப்பிடப்படும் இந்தக் குறியை - # பயன்படுத்துகிறேன். 
இது டெலி·போனில் டயல் ஸிஸ்டம் மறைந்து பட்டன் 
ஸிஸ்டம் வந்தபோது டெலி·போன் பட்டன்களில் இடம் பெற்று 
பரவியது. 
அதற்கு முன்னர் அதனை 'நம்பர்' என்னும் சொல்லுக்கு உரிய 
குறியாகப் பயன்படுத்தினோம். நம்பர் 6 என்பதை #6 என்று எழுதும் 
வழக்கம் ஏற்பட்டது. 
இந்தக் குறி மிகவும் புராதனமானது. 
பண்டைக்காலத்தில் கெல்த்தியர்(Celts) என்னும் இனத்தவர் 
இருந்தனர். அவர்களிலேயே ட்ரூய்ட்(Druid) என்னும் பிரிவினர் 
இருந்தனர்.
அவர்களுடைய மாந்திரீக சாஸ்திரத்தில் இந்தக் குறியீடு இடம்
பெற்றது. 
அவர்களுடைய மாந்திரீகச்சடங்குகளில் யாககுண்டங்கள் 
மாதிரியும், மண்டலங்கள் மாதிரியும் உள்ள அமைப்புக்கள் பயன்
பட்டன. 
அந்த வகையில் இருந்தக் குறியீட்டின் அமைப்பில் சில 
மண்டலங்கள் போடப்பட்டன. 
அவர்களுடைய வாஸ்து சாஸ்திரத்திலும் இந்த அமைப்பு 
வரும். நடுவில் ஒரு சதுக்கம் இருக்கும். அதனை Village அல்லது 
Town Square என்பார்கள். அதனைச் சுற்றிலும் எட்டு பாகங்களாக 
Plots அல்லது Fields அமையும். தோட்டந்துரவு, விவசாய நிலங்கள், 
குடியிருப்புகள் அந்த ப்லாட்களில் அமைந்திருக்கும். இவற்றின் 
இடையில் வீதி, தெரு, வரப்புகள் போன்றவை செல்லும். 
இதற்கு ஒரு பெயரும் இருந்தது. 

'Octohorp'.

Octo என்பது Eight; Horp என்பது Field.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday, March 11, 2013


Written 12/03/2013

அன்பர்களே,

நேற்று ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>.
என்னத்தைக் கண்டோம்?

வேதம், வேதாந்தம், ஆகமம், தந்திரம், இதிகாசம், புராணம், சாஸ்திரம்,
வித்யா, சடங்கு, சம்பிரதாயம், ஆசாரம், பூஜை, புனஸ்காரம், உபாசனை,
தியானம், அர்ச்சனை, ஜபம், தோத்திரம், துதி, நாமாவளி, உச்சாரணம்,
உச்சாடணம், ஹோ¡மம், யாகம், திருமுறை, தேவாரம், நாலாயிரம், -
இன்னும் இவை போன்ற பல சொற்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளவை.

ஆனால் இவை எவ்வெவற்றைக் குறிக்கின்றன என்ற மிக அடிப்படையான
விபரங்கள்கூட மலேசியத் தமிழ் இந்துக்களில் பெரும்பான்மையினருக்குத்
தெரியாது.

இவை இந்து சமயத்தின் முக்கியமான சொற்கள். அடிக்கடி யாராவது
பேச்சுவாக்கில் சொல்வார்கள்.

நான் சொல்வது உண்மையா இல்லையா என்று பரீட்சை செய்து
பார்க்கவேண்டியதுகூட இல்லை.
விவாதம் பண்ணவேண்டியதும் இல்லை

உங்களுக்கே தெரியும்.
>>>>>>>>>>>>>>>>>>>>

இது நான் எழுதியது.
அதன்பேரில் ஒரே ஓர் ஆள், 'உபாசனை, பூஜை, ஜபம்' பற்றி
கேட்டிருந்தார்.
இதையெல்லாம் பொது அரங்கத்தில் கேட்மாட்டார்கள். அதான் இருக்கே...... ச்சேட் மெஸேஜ். அதன்மூலம். என்ன கேட்கிறார்கள் என்பது
ஏன் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கிறார்கள் என்பது
அவர்களுக்குத்தான் தெரியும். அறியாமையை அம்பலப்படுத்துவானேன் என்ற
எண்ணமாக இருக்கலாம்.
கீழ்க்கண்ட விபரங்கள் நான் 2007-இல் எழுதிய மடலில் ஒரு பகுதி.
அதில் கொஞ்சம் சேர்மானம் சேர்த்து நகாஸ் வேலை செய்து அவருக்கு
மெஸேஜில் அனுப்பினேன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மந்திரஜபம் முதலியவற்றைக் கைக்கொண்டு செய்யப்படும்
உபாசனைகளுக்குக் கிரமம் உண்டு.
இக்காலத்தில் அத்தனை ஆசார அனுஷ்டானங்களுடன் செய்வது
சிரமம்தான்.
மானச ஜபத்தைக் கைக்கொண்டால் வெளிப்படையான ஆசார
அனுஷ்டானங்கள் குறைந்துவிடும்.
எந்த அளவுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்களில் மனதைச்
செலுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய உபாசனையின் மையப்பகுதி - முக்கியமாக கருப்பொருள் - அதன்மீது செலுத்தவெண்டிய கவனமும் ஈடுபாடும் குறைந்துவிடும்.
தற்காலத்து இளைஞர்கள் உபாசனை செய்யவேண்டும் என்று
எண்ணுவதில் தவறில்லை. வேலைகளுக்கும் நடுவில் செய்யவேண்டும் என்றால் அதற்கேற்றவகையில் அதை வைத்துக்கொள்ளலாம்.

 KISS
 Keep It Short and Sweet.

மிக நீளமான மந்திரமோ, உக்கிரமூர்த்திகளின் மந்திரங்களோதான்
மிகவும் ஆற்றல் உள்ளவை என்றும் நினைக்கக்கூடாது.
அதெல்லாம் ஒரு மாடர்ன் ட்ரெண்ட்.
'நாயோட்டும் மந்திரம்' என்று சித்தர்கள் மரபில் ஒரு ரகசிய
மந்திரத்தைக் குறிப்பிடுவார்கள்.

 "நாயோட்டும் மந்திரம் நாதன் இருப்பிடம்
 நாயோட்டும் மந்திரம் நாம் அறியோமே!"

அந்த 'நாயோட்டும் மந்திரம்' ஒரே ஓர் எழுத்துத்தான்.
  தெய்வங்களுக்கு உரிய மூலமந்திரங்கள் ஓர் அட்சரத்திலிருந்து எட்டு அட்சரம் வரைக்கும் இருக்கும்.
நாயோட்டும் மந்திரம் சிவ பரம்பொருளுக்கு உரியது.
விநாயகருக்கு ஓர் அட்சரம். அம்பிகைக்கு ஓர் அட்சரம்,
சுப்பிரமணியருக்கு ஓர் அட்சரம், கிருஷ்ணருக்கு ஓர் அட்சரம்
என்றெல்லாம் இருக்கின்றன.
இவை ஜபத்துக்கும் தியானத்துக்கும் பயன்படக்கூடும்.
இந்த அட்சரங்களுக்கு மேல் பதினைந்து அட்சரம், அஷ்டாட்சரம்
என்றெல்லாம் நிறைய இருக்கின்றன.
'மாறல்' என்னும் முறையின் மூலம் சிவனுக்கு இருபத்தைந்து அட்சரங்கள்
வருமாறு செய்வார்கள்.
'சஹஸ்ராக்ஷரீ வித்யா' என்பது ஆயிரம் அட்சரங்களைக் கொண்டது.
பல அட்சரங்களைக் கொண்ட வலுமிக்க சுப்பிரமண்ய மந்திரம் கூட புழக்கத்தில் இருக்கிறது.
இவையெல்லாம் உபதேசக் கிரமப்படி வாங்கிக்கொள்ளவேண்டியவை.
'நமசிவாய'  மந்திரத்துக்கு உபதேசமே தேவையில்லை என்று சில
சான்றோர் சொல்லியிருக்கிறார்கள்.
தட்சிணாமுர்த்தியே உபதேசித்துவிடுவார்.
குருவைத் தேடுபவர்களுக்கு மஹாதேசிகனான சிவனோ, முருகனோ,
அம்பிகையோ குருவாய் வருவார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லும்.
அல்லது குருவை அனுப்புவார்கள்.
இன்னும் எழுதலாம்....

அன்புடன்

ஜெயபாரதி